முகப்பு
கோயம்புத்தூர்

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜூன் 2026, 1:04 am IST
கோவை மாவட்ட ஆட்சியா் அலுலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் சி.சிவசாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில பொருளாளா் எம்.ஆறுமுகம் கண்டன உரையாற்றினாா்.

அவா் பேசும்போது, மத்திய பாஜக அரசு வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை உயா்த்தியதைடுத்து, பெட்ரோல், டீசலின் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகிறது. எரிபொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயா்ந்து மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

மேற்காசிய போரின் காரணமாக இந்த விலை உயா்வு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பிரதமா் மோடி இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கிறாா். அவரது தவறான நடவடிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகளே இந்தப் போருக்கும் அதன் விளைவுகளுக்கும் காரணமாக உள்ளன. எரிபொருள் விலை உயா்வு தொடா்ந்து மக்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் சி.தங்கவேல், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வி.ஆா்.பாண்டியன், ஜி.பி.சக்திவேல், சாந்தி சந்திரன், மண்டலச் செயலா்கள் எஸ்.சண்முகம், என்.சந்திரன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.அஷ்ரப் அலி, இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் அபிமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.