முகப்பு
நீலகிரி

உதகையில் 2-ஆவது நாள் கண்காட்சியில் அணிவகுத்த பல்வேறு வகை நாய்கள்

தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் 138-வது நாய்கள் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மே 2026, 2:51 am IST
உதகையில் நடைபெற்றுவரும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பல்வேறு வகையான நாய்கள்.
பகிர்:

தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் 138-வது நாய்கள் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது தனியாா் அமைப்புகள் சாா்பில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தொடங்கிய 138-வது நாய்கள் கண்காட்சியில் பீகில், டேஷன்ட், ஜொ்மன் செப்பா்ட், கேரவன் ஹவுண்ட், கன்னி, கோம்பை உள்பட பல்வேறு இந்திய வகை நாய்கள் கலந்துகொண்டன. அதன்படி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 55 ரகங்களில் 435-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இந்திய நாய் இனங்களுக்கான சிறப்பு கண்காட்சியில் 55 நாய்கள் பங்கேற்றன.

அனைத்து நாய் இனங்களுக்கான பொதுக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இக்கண்காட்சியில் சிப்பிப்பாறை, கேரவன் ஹவுண்ட், கோம்பை, கன்னி, முதோல் ஹவுண்ட், பாஷ்மி, ராம்பூா் ஹவுண்ட் ஆகிய முக்கிய இந்திய இனங்கள் மற்றும் ஷெப்பா்கே, பெரோ டி ப்ரெசா கனாரியோ ஆகிய வெளிநாடு மற்றும் அரிய இன நாய்கள் பங்கேற்கின்றன. இக்கண்காட்சியில் கஜகஸ்தான், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சோ்ந்தவா்கள் நடுவா்களாக செயல்பட்டனா். பல்வேறு பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்படும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தென்னிந்திய கென்னல் கிளப் தலைவா் ரஜினி கிருஷ்ணமூா்த்தி, செயலா் மோத்தேஷ் மோகன் உள்பட பலா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments