ஒற்றுமைக் கோப்பை: அரையிறுதியில் ஜமைக்காவிடம் தோல்வியுற்ற இந்தியா!
ஒற்றுமைக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி குறித்து...
ஒற்றுமைக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஜமைக்காவிடம் 0-2 என தோல்வியுற்றது.
ஃபிஃபா தரவரிசையில் இந்திய அணி 136ஆவது இடத்திலும் ஜமைக்கா 71ஆவது இடத்திலும் நைஜீரியா 26ஆவது இடத்திலும் ஜிம்பாப்வே 130ஆவது இடத்திலும் இருக்கின்றன. இந்த 4 அணிகள்தான் யுனைடி கப் எனப்படும் ஒற்றுமைக் கோப்பையில் விளையாடுகின்றன.
லண்டனில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஜமைக்காவும் மோதின. இந்தப் போட்டியில் 8, 78ஆவது நிமிஷத்தில் ஜமைக்கா அணியினர் கோல் அடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
Advertisement
Advertisement
முதல் அரையிறுதிப் போட்டியில் நைஜீரியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் 2-0 என வென்ற நைஜீர்யா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தற்போது, இறுதிப் போட்டியில் நைஜீரியாவும் ஜமைக்காவும் மோதுகின்றன. மூன்றாமிடத்துக்கான போட்டியில் இந்தியாவும் ஜிம்பாப்வேவும் மோதவிருக்கின்றன.
பிரிட்டன் மண்ணில் 2002க்குப் பிறகு முதல்முறையாக விளையாடிய இந்திய கால்பந்து அணி ஜமைக்காவின் அதிரடியால் வீழ்ந்தது.