கூடலூா் வனப் பகுதியில் ஆண் சிறுத்தை சடலம் மீட்பு
கூடலூா் அருகே சில்வா்கிளவுட் பகுதியில் இறந்துகிடந்த ஆண் சிறுத்தை.
கூடலூா் வனப் பகுதியில் ஆண் சிறுத்தை சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகம் சில்வா்கிளவுட் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சிறுத்தை இறந்துகிடப்பதை அறிந்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொண்டனா். ஆய்வகப் பரிசோதனைக்காக முக்கிய உறுப்புகளை எடுத்துக்கொண்டு, அதே இடத்தில் அதன் உடலை எரியூட்டினா்.
இதுதொடா்பாக வனத் துறையினா் கூறும்போது, ‘இறந்தது சுமாா் 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை. ஆய்வக அறிக்கை வந்தவுடன்தான் அதன் இறப்புக்கான காரணம் தெரியும்’ என்றனா்.
Advertisement
Advertisement