தமாகா கையெழுத்து இயக்கம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்தக் கையெழுத்து இயக்கத்தை கட்சியின் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைவர் டி.ரத்தினவேல் தொடக்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, உடுமலை நகரில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இதில், மாவட்ட துணைத் தலைவர் யுகேபிஎம்.கார்த்திகேயன், இளைஞரணி மாநில துணைத் தலைவர் அபிராமி, நகரச் செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.