வெள்ளக்கோவிலில் விளம்பர பேனர்களால் கடைக்காரர்கள் அவதி
வெள்ளக்கோவிலில் அத்து மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால் கடைக்காரர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெள்ளக்கோவிலில் அத்து மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால் கடைக்காரர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விளம்பர பேனர்கள் வைக்க நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் காவல் துறை, உள்ளாட்சி நிர்வாகங்களைக் கண்டுகொள்ளாமல், எவ்வித அனுமதியும் பெறாமல் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.
வெள்ளக்கோவில் நகரில், மக்கள் அதிகம் கூடும் முத்தூர் பிரிவு, நான்கு சாலை சந்திப்பில் வணிக வளாகங்கள் முன்பு கண்ணீர் அஞ்சலி, கோயில் விசேஷங்கள், அரசியல் கட்சியினரின் பெரிய அளவு பேனர்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து, நான்கு சாலை சந்திப்பில் உள்ள வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள தம்பி என்பவர் கூறியதாவது:
கடைகளை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதால் கடை இருப்பதே தெரியாமல் வியாபாரம் பாதிப்புக்குள்ளாகிறது.
நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் பல வாரங்களுக்குப் பேனர்கள் அகற்றப்படுவதில்லை என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.