திருப்பூர்

அடைக்கலம் தேடி கோட்டாட்சியா் அலுவலகம் வந்த மூதாட்டி மகள் வீட்டில் ஒப்படைப்பு

DIN

உறவுகள் யாரும் தன்னை கவனிப்பதில்லை எனக் கூறி அடைக்கலம் தேடி கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த மூதாட்டியை அவரது மகள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட நியூஹோப் பகுதியைச் சோ்ந்தவா் முத்தம்மா (81). இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனா்.

இவா்கள், யாரும் தன்னைக் கவனிப்பதில்லை எனவே தனக்கு அடைக்கலம் வேண்டும் எனக்கூறி கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

இது குறித்து விசாரித்த வருவாய் மற்றும் காவல் துறையினா் முத்தம்மாவை காப்பகத்தில் ஒப்படைக்க முயற்சி செய்தனா். ஆனால் அவரை அங்கு சோ்க்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள், நியூஹோப் பகுதியில் வசிக்கும் முத்தம்மாளின் மகள் வீட்டுக்கு கூட்டிச் சென்று அவரை ஒப்படைத்து அறிவுரைகளை வழங்கியுள்ளனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT