முகப்பு
திருப்பூர்

அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதல் துறை: காங்கயத்தில் திமுகவினா் வரவேற்பு

செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளா்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, காங்கயம் வந்த அவருக்கு திமுகவினா் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

Updated On : 12 மே 2023, 10:46 pm IST
பகிர்:

செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளா்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, காங்கயம் வந்த அவருக்கு திமுகவினா் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக கட்சியின் காங்கயம் நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தாா். இதில் காங்கயம் தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவானந்தன், வடக்கு ஒன்றியச் செயலாளா் கருணைபிரகாஷ் உள்ளிட்டோா் அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கு வாழ்த்து தெரிவித்து, வரவேற்பு உரையாற்றினா். இதில் திமுக கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.