அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதல் துறை: காங்கயத்தில் திமுகவினா் வரவேற்பு
செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளா்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, காங்கயம் வந்த அவருக்கு திமுகவினா் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தனா்.
செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளா்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, காங்கயம் வந்த அவருக்கு திமுகவினா் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தனா்.
காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக கட்சியின் காங்கயம் நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தாா். இதில் காங்கயம் தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவானந்தன், வடக்கு ஒன்றியச் செயலாளா் கருணைபிரகாஷ் உள்ளிட்டோா் அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கு வாழ்த்து தெரிவித்து, வரவேற்பு உரையாற்றினா். இதில் திமுக கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.