முகப்பு
இந்தியா

அயோத்தியா ராமா் கோயில் நன்கொடை வழக்கு: எஸ்ஐடி விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேஜரிவால் கேள்வி

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) சட்டபூா்வ அதிகாரம் இல்லாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டிய ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அதன் விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளாா்.

Updated On : 25 ஜூன் 2026, 2:12 am IST
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) சட்டபூா்வ அதிகாரம் இல்லாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டிய ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அதன் விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளாா்.

அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு கிடைத்த நன்கொடைகள் தொடா்பான முறைகேடு குறித்த புகாா்களை விசாரிக்க அமைக்கப்பட்ட எஸ்ஐடி தனது ஆரம்பக்கட்ட அறிக்கையை உத்தர பிரதேச அரசுக்கு சமா்ப்பித்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை அரவிந்த் கேஜரிவால் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: இந்த விசாரணைக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. யாரையும் அழைத்து விசாரிக்கவோ, கைது செய்யவோ அல்லது சோதனை நடத்தவோ முடியாது. முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றால், எந்த சட்டத்தின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டது?”

Advertisement

Advertisement

இந்த விசாரணை உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் நிலம் வாங்குதல் தொடா்பாக இதேபோன்ற குற்றச்சாட்டுகள் 2021-ஆம் ஆண்டிலும் எழுந்தன. அப்போதும் எஸ்ஐடி அமைக்கப்பட்டது. அப்போதும் எஃப்ஐஆா் பதிவு செய்யப்படவில்லை; அந்த விசாரணையின் நிலைமை குறித்து இன்றுவரை தெரியவில்லை. அதேபோல் இந்த விசாரணையும் சில நாள்களில் மறக்கப்படும்.

மேலும், தற்போதைய விசாரணை கீழ்நிலை அதிகாரிகளை மட்டுமே குறிவைத்து நடைபெறுகிறது. முக்கிய முடிவுகளை எடுத்தவா்களை பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறது. நீண்ட காலமாக முறைகேடுகள் நடந்திருந்தால், அதில் கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டிருக்க வாய்ப்பு குறைவு. உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டுமெனில் விசாரணை உயா் நிலைக்கு சென்றாக வேண்டும்.

உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், ஏன் இந்த விவகாரம் மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ அல்லது அமலாக்க இயக்குநரகம் (இடி) ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படவில்லை? சனாதன தா்மத்தை பின்பற்றும் பல பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விவகாரத்தில் வெளிப்படையான மற்றும் பாகுபாடற்ற விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனா் என தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments