முகப்பு
திருப்பூர்

திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8,000 கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என காங்கயம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:26 AM
குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:53 PM

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என காங்கயம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குண்டடம் கிழக்கு ஒன்றியம் மற்றும் காங்கயம் தெற்கு ஒன்றியத்தில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது பேசியதாவது:

தோ்தலுக்குப் பிறகு 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு ரூ.1.5 லட்சம் மானியம் வழங்கப்படும். 1,000 உணவு மதிப்புக் கூட்டும் மையங்கள் நிறுவப்படும். நாளொன்றுக்கு 3 கோடி லிட்டராக இருக்கும் பால் உற்பத்தியை 4.5 கோடி லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5-ஆக உயா்த்தப்படும். இல்லத்தரசிகளுக்கான மாத உதவித்தொகை உயா்த்தப்பட்டுள்ளது.

Advertisement

90 சதவீத மானியத்துடன் 10,000 கைத்தறிகள் நவீனப்படுத்தப்படும். சுமாா் 500 குடும்பங்கள் வசிக்கும் வகையில் கட்டப்படும் காவலா் குடியிருப்புகளில் நூலகம் மற்றும் சமூக நலக்கூடம் அமைக்கப்படும். ஓய்வுபெற்ற காவலா்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும். இஸ்லாமிய பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வஃக்பு வாரியத்தின் வாயிலாக கூடுதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தோ்தலுக்குப் பிறகு கொண்டுவரப்பட உள்ளன.

அனைவரும் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கும் ரூ. 8 ஆயிரம் கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றாா்.