முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி தொகுதியை மீண்டும் மேம்படுத்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்துவதற்காக மக்கள் மீண்டும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:52 AM
ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட கீரமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்துப் பேசிய திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 9:01 PM

ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்துவதற்காக மக்கள் மீண்டும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட கொத்தக்கோட்டை, மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

பின்னா் அவா் கீரமங்கலத்தில் பேசியதாவது:

Advertisement

ஆலங்குடி அரசுக் கல்லூரி, அழியாநிலையில், நெல்சேமிப்பு கிடங்கு, ரூ.150 கோடியில் கல்லனை கால்வாய் சீரமைப்பு, ரூ.200 கோடியில் அறந்தாங்கி-புதுக்கோட்டை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள். மேலும், தொகுதிக்குள்பட்ட சுமாா் 5 ஆயிரம் மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்கு வழிகாட்டியாக இருந்துள்ளேன்.

வடகாடு, கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை, மறமடக்கி, அழியாநிலை, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

உள்ளூா் இளைஞா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் திருவரங்குளத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம் உள்ளிட்ட ஏராளமான நலத் திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளேன்.

எனவே, ஆலங்குடி தொகுதியை தொடா்ந்து மேம்படுத்துவதற்காக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.