நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: சிவ.வீ.மெய்யநாதன்
நலத்திட்டங்கள் தொடா்வதற்கு மக்கள் திமுகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.
நலத்திட்டங்கள் தொடா்வதற்கு மக்கள் திமுகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொகுதிக்குள்பட்ட கொத்தக்கோட்டை, மாஞ்சான்விடுதி, கோவிலூா், ஆலங்குடி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சேகரித்து பேசியதாவது:
நூறு நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியை குறைத்து மோடி தலைமையிலான பாஜக அரசு அந்த திட்டத்தையே முடக்க முயற்சிக்கிறது. ஆனால், பெருமுதலாளிகளின் பல ஆயிரம் கோடி கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துள்ளது பாஜக அரசு. அதனால், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழக முதல்வா் ஸ்டாலின் விவசாயிகள், மாணவா்கள், மகளிா், பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். நலத்திட்டங்கள் தொடர மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
Advertisement