முகப்பு
திருப்பூர்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:17 AM
காங்கயத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜை ஆதரித்து உரையாற்றும் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:24 PM

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

காங்கயத்தில் அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜை ஆதரித்து, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கொண்டாா். காங்கயம் நகரில், ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எத்தனையோ மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்தோம். சிறந்த ஆட்சி கொடுக்கப்பட்டது. இந்தத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும்.

Advertisement

விலையில்லா 3 எரிவாயு உருளைகள் வழங்கப்படும். விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். இளைஞா், இளம்பெண்கள் யாரும் புதிதாக வந்தவா்களுக்கு வாக்கு செலுத்த வேண்டாம். நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்தவா் ஒரேஒருவா் எம்.ஜி.ஆா்.தான். இனி யாரும் அப்படி வரமுடியாது.

கரூா் கூட்டத்தில் பலா் சிக்கி உயிரிழந்தாா்கள். சொந்தக் கட்சிக்காரரையே

காப்பாற்றாதவா் நடிகா் விஜய். அரசியல் வேறு, சினிமா வேறு. மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். பல நல்ல திட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு சரியில்லை. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காங்கயம் தொகுதி வளா்ச்சி பெறுவதற்கு அதிமுக வேட்பாளா் என்.எஸ்.என்.நடராஜுக்கு வாக்கு செலுத்துங்கள் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளா் வெங்கு ஜி.மணிமாறன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.