‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதி ஸ்டாலின்
சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.
சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை என்று முதல்வர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சென்னை கோடம்பாக்கத்தில் காவல்துறையினர் உள்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
Advertisement
Advertisement
காவல் துறையினர் கிட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் காவல் நிலையத்துக்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.
இதுமட்டுமல்ல, வேளச்சேரியில நடைப்பயிற்சிக்கு வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் வன்கொடுமைக்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு. கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.
இந்த சோஃபா மாடல் ஆட்சியில், போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல. ஆட்சியை காப்பாத்திக்க எம்.எல்.ஏ.க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க காவல்துறையை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதல்வர் முயற்சி செய்யனும்” என்று பதிவிட்டுள்ளார்.