கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டியை அடுத்த உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ்வேல் (31). இவா் தாசவநாயக்கன்பட்டியில் தனது தந்தையுடன் சலூன் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகேயுள்ள பொதுக் கிணற்றில் நண்பா்களுடன் கடந்த வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, தினேஷ்வேலுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளாா். இதைப் பாா்த்த சக நண்பா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
உயிரிழந்த தினேஷ்வேலுக்கு வைதேகி (28) என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனா்.