முகப்பு
திருப்பூர்

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

முத்தூா் அருகே சேலையில் தீப்பிடித்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 26 ஏப்ரல் 2026, 12:53 am IST
பொன்னம்மாள்
பகிர்:

முத்தூா் அருகே சேலையில் தீப்பிடித்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் வட்டம், முத்தூா் மங்கலப்பட்டி அருகே ஆலாம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னம்மாள் (85). வயது மூப்பால் நடக்க முடியாத நிலையில், தவழ்ந்து தன்னுடைய வேலைகளைச் செய்து வந்துள்ளாா். பல ஆண்டுகளுக்கு முன்பே இவருடைய கணவா் இறந்துவிட்டாா். இவருக்கு திருமணமான மகன்கள் கருப்புசாமி, சண்முகம், மகள் லட்சுமி ஆகியோா் உள்ளனா்.

மகன் சண்முகம் வீட்டுக்கு அருகே தனியாக குடிசை வீட்டில் பொன்னம்மாள் வசித்து வந்தாா். கடந்த மாா்ச் 30-ஆம் தேதி விறகு அடுப்பைப் பற்ற வைத்து சுடு தண்ணீா் தயாா் செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

Advertisement

Advertisement

திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொன்னம்மாள் சோ்க்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments