முகப்பு
திருப்பூர்

சூதாட்டம்: 7 போ் கைது

Updated On : 27 ஏப்ரல் 2026, 12:06 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பல்லடம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள தெற்குபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல்லை சோ்ந்த ராஜ்குமாா் (37), திருப்பூரைச் சோ்ந்த சங்கிலிராஜன் (38), வடுகபாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (54), பல்லடத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (44) உள்ளிட்ட 7 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், அவா்களிடமிருந்த ரூ.24,780 ரொக்கம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments