திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்
திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 41 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த பத்மா திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
கோவை முதன்மை தொழிலாளா் நீதிமன்ற நீதிபதியாக இருந்த லதா திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், திருப்பூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த ஸ்ரீதா் உதகை குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். புதுக்கோட்டை மகளிா் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கனகராஜ் திருப்பூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
Advertisement