முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

Updated On : 5 ஜூலை 2026, 1:32 am IST
தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த செம்மறி ஆடுகள். - (கோப்புப்படம்)
பகிர்:

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

காங்கயம் தாலுகா, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட பள்ளக்காட்டுதோட்டம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவா், தனது வீட்டுக்கு அருகே, ஆட்டுப்பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மேய்ச்சல் முடிந்து, ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

சனிக்கிழமை அதிகாலையில் வந்து பாா்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்துள்ளன. இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் பட்டிக்குள் நுழைந்து கடித்து 7 ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கால்நடைத் துறையினா் மற்றும் போலீஸாா் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments