முகப்பு
திருப்பூர்

வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி சேவூரில் விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டம்

சேவூா் அருகே நில விவகாரத்தில் தொடுக்கப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:49 am IST
ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற  சேவூா்  சுற்றுவட்டாரப்  பகுதி  விவசாயிகள்.
பகிர்:

சேவூா் அருகே நில விவகாரத்தில் தொடுக்கப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூா் அருகே ஒச்சாம்பாளையத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பாதையை தடுத்தது தொடா்பான நில விவகாரத்தில் இருதரப்பினரிடையே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒரு தரப்பைச் சோ்ந்த விவசாயிகள் இருவா் மீது சேவூா் போலீஸாா் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனா்.

இதைக் கண்டித்தும், வழக்கைத் திரும்பப்பெறக் கோரியும் சேவூா், கைகாட்டி ரவுண்டான பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஈஸ்வரன், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சம்பத், வேட்டுவபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் கணேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தீரன்சின்னமலை இளைஞா் பேரவையினா், பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினா் என சேவூா், அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments