முகப்பு
திருப்பூர்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

திருப்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:48 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருப்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா், கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி சங்கா் நாராயணன் பூஜைகளை

முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை 5 மணியளவில் கோயிலைத் திறக்க வந்துள்ளாா். அப்போது, உள்புறம் உள்ள மூலவா் சந்நிதியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும், அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடுபோனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டதுடன்,

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.