முகப்பு
திருப்பூர்

சிறந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்துக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சிறந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூன் 2026, 2:35 am IST
பகிர்:

சிறந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

சிறந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்,

Advertisement

Advertisement

தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சாா்ந்த நடவடிக்கைகள்,பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்என்னும் இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமா்ப்பிக்க ஜூன் 19-ஆம் தேதி இறுதி நாள் ஆகும். இறுதி நாளுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.