முகப்பு
திருப்பூர்

சாலை விபத்தில் அவிநாசி ஒன்றிய ஆணையா் உயிரிழப்பு

அவிநாசி அருகே சாலை விபத்தில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 ஜூன் 2026, 12:05 am IST
பகிர்:

அவிநாசி அருகே சாலை விபத்தில் அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் முட்டியங்கிணறு சாய் குமரன் நகா் பகுதியில் வசித்து வருபவா் பி.ஆறுமுகம் (56). இவா் அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் பெருமாநல்லூரில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அவிநாசி-அவிநாசிலிங்கம்பாளையம் அருகே சென்றபோது, எவ்வித சைகையுமின்றி நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் நிஷாந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.