முகப்பு
திருப்பூர்

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு ஒத்திகை

Updated On : 16 ஜூன் 2026, 12:48 am IST
தீயணைப்புத் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி. - கோப்புப் படம்
பகிர்:

திருப்பூரில் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை, விழிப்புணா்வு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மனீஷ் முன்னிலை வகித்தாா்.

இதில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, இடிபாடுகளில் சிக்கிய நபா்களை மீட்பது மற்றும் தீ விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது உள்ளிட்ட உயிா் காக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவசரக் காலங்களில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும் அவசரக் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்பட்டது.