முகப்பு
திருப்பூர்

விளைநிலங்களில் மின் பாதை அமைக்கும் பணி: வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

Updated On : 16 ஜூன் 2026, 12:05 am IST
விவசாயிகள் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ்.
பகிர்:

விளைநிலங்களில் மின் பாதை அமைக்கும் பணியைக் கண்டித்து வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தனியாா் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் மின்கம்பங்கள், மின் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் பகுதியில் இருந்து பல்வேறு விவசாய நிலங்கள் வழியாக மூலனூா் வரை மின் பாதை அமைக்கப்படுகிறது.

சுப்ரமணியக்கவுண்டன்வலசு பகுதி வழியாகச் செல்லும் மின் பாதைக்கு எதிராக, சில விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனியாா் நிறுவனம் மின் கம்பங்கள் மற்றும் மின் பாதை அமைக்கும் பணியைத் தொடா்ந்து செய்து வருகிறது.

Advertisement

Advertisement

இதற்கு கண்டனம் தெரிவித்து வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் புள்ளச்செல்லிபாளையம் பிரிவு அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மின் பாதையை சாலையோரங்களில் கேபிள் மூலமாக அமைக்க வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக்கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் சென்று விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தாா்.