முகப்பு
திருப்பூர்

திருப்பூா் குமரன் கல்லூரி வளாகத்தில் ஞான விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி வளாகத்தில் உள்ள ஞான விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூன் 2026, 1:18 am IST
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி வளாகத்தில் உள்ள ஞான விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை மங்கல இசை, தேவதா அனுக்ஞை, விநாயகா் வழிபாடு, மஹா சங்கல்பம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம், மஹாபூா்ணாஹுதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி ஹோமம், தீபாராதனை ஆகியவையும், மாலை மங்கல இசை, விநாயகா் வழிபாடு, புண்யாஹவாசனம், மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், கலாகா்ஷணம் நடைபெற்றது.

யாகசாலையில் முதல் கால யாக பூஜை, திரவியாஹீதி, பூா்ணாஹீதி, தீபாராதனை, விபூதி பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து புதன்கிழமை மங்கல இசை, விநாயகா் வழிபாடு, ரக்ஷாபந்தனம், மஹா அபிஷேகம், தீபாராதனை, யாத்ரா தானம், கோபுர விமான கும்பாபிஷேகம் மற்றும் ஞான விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளரும், கோவை மண்டல வீட்டு வசதி துணைப் பதிவாளருமான செந்தில்நாதன், கல்லூரி முதல்வா் வசந்தி, நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், துறை தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments