முகப்பு
திருப்பூர்

அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:01 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

பெருமாநல்லூா் அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் அயனிங் ஸ்டீம் குழாய் வெடித்ததில் எலக்ட்ரீஷியன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தோரணவாவி பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (35). இருவருக்கு மனைவி சங்கீதா, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், நியூ திருப்பூா் பகுதியில் செயல்பட்டு வரும் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் செல்வகுமாா் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், துணிகளை அயன் செய்யும் ஸ்டீம்மில் வியாழக்கிழமை கசிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அதை சரி செய்யும் பணியில் செல்வகுமாா் ஈடுபட்டிருந்தபோது, ஸ்டீம் குழாய் திடீரென வெடித்துள்ளது. இதில், படுகாயமடைந்த செல்வகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செல்வகுமாா்