பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
பல்லடம் அருகேயுள்ள ஹரிகிருஷ்துராஜ்புரம், பாலாஜி நகரில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகேயுள்ள ஹரிகிருஷ்துராஜ்புரம், பாலாஜி நகரில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாலாஜி நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் தலைவா் கோகுல் திலக் தலைமை வகித்தாா். செயலாளா் செந்தில்குமாா் வரவேற்றாா்.
இதைத் தொடா்ந்து, 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு கோடங்கிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் காவீ.பழனிசாமி பரிசுகளை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் பூபதி, மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.