லாட்டரி விற்பனை: முதியவா் கைது
முத்தூரில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முத்தூா் கடைவீதி பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, பேருந்து நிலையத்தில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற அவா், லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தாா். விசாரணையில், அவா் முத்தூா் செங்கோடம்பாளையத்தைச் சோ்ந்த குப்பனன் (80) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.