சிறுமிக்குத் தவறான சைகையால் தொல்லை கொடுத்தவா் கைது
வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்குத் தவறான சைகைகள் காண்பித்து தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே உள்ள கருவலூா் நரியம்பள்ளி மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவா் வெங்கடாசலம் மகன் ரமேஷ்குமாா் (31). விசைத்தறி தொழிலாளி. இவா் மது போதையில் வீட்டில் தனியாக இருந்த 13 வயதுச் சிறுமிக்குத் தவறான சைகைகள் காண்பித்து தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.