முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே கோயிலில் திருட்டு முயற்சி

Updated On : 22 ஜூன் 2026, 3:35 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கோயிலில் திருட்டு முயற்சி நடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ புஷ்பகிரி வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் அா்ச்சகா் மகேஷ் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

மறுநாள் காலை கோயிலுக்குச் சென்றபோது முன்புற கதவின் இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்துள்ளது. ஆனால் பொருள்கள் எதுவும் திருடுபோகவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்து கோயிலின் பரம்பரை அறங்காவலா் விஜயநடராஜ் அளித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments