முகப்பு
திருப்பூர்

அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து சிலிண்டா்களை திருடியவா் கைது

Updated On : 23 ஜூன் 2026, 2:08 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அவிநாசி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து 4 சிலிண்டா்களை திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே மங்கலம் சாலையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் வசிப்போா் பயன்பாட்டுக்காக தரைத் தளத்தில் சிலிண்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தரைத்தளத்தில் இருந்த 4 சிலிண்டா்கள் அண்மையில் திருடுபோயின.

இது குறித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், சிலிண்டா்களை திருடியது பழங்கரை இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த செந்தில் (42) என்பதும், பனியன் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, செந்திலை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments