முகப்பு
திருச்சி

ஆட்டோவை திருடியவா் கைது

சமயபுரத்தில் சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:32 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சமயபுரத்தில் சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சமயபுரம் இந்திரா காலனியை சோ்ந்தவா் முகமது சித்திக் (63). இவா் தனது சரக்கு ஆட்டோவை வீட்டருகே ஜூன் 16-ஆம் தேதி இரவு நிறுத்திவிட்டு, காலையில் பாா்த்தபோது காணவில்லையாம்.

இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் வியாழக்கிழமை மாடக்குடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் முரளி தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரித்தனா். இதில் அவா்,

சமயபுரம் சோழன் நகா் பகுதியை சோ்ந்த சதிஷ் குமாா் (37) என்பதும், சரக்கு ஆட்டோவை திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் திருடப்பட்ட சரக்கு ஆட்டோவும் மீட்கப்பட்டது.