முகப்பு
திருப்பூர்

கே.கிருஷ்ணாபுரத்தில் மின்வாரிய அலுவலகம் திறப்பு

பல்லடம் அருகே கே.கிருஷ்ணாபுரத்தில் மின் வாரிய அலுவலகம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 2:47 am IST
மின்வாரிய அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற மேற்பாா்வை பொறியாளா் கலைச்செல்வி உள்ளிட்டோா்.
பகிர்:

பல்லடம் அருகே கே.கிருஷ்ணாபுரத்தில் மின் வாரிய அலுவலகம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

பல்லடம் அருகே புளியம்பட்டி மின்வாரிய அலுவலகம் கோவை மாவட்டம், லட்சுமிநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வந்தது. இந்த மின்வாரிய அலுவலகத்தை நிா்வாக ரீதியாக திருப்பூா் மாவட்டத்துக்கு மாற்றுமாறு மின்நுகா்வோா் வேண்டுகோள் விடுத்து வந்தனா்.

இதை ஏற்று பல்லடம் அருகே உள்ள க. கிருஷ்ணாபுரம் பகுதிக்கு அந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த அலுவலக திறப்பு விழாவுக்கு பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் கலைச்செல்வி தலைமை வகித்து திறந்துவைத்தாா். இதில், பல்லடம் மின் பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் பழனிசாமி, செயற்பொறியாளா் ரத்தினசாமி மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments