தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, டி.எஸ்.பி. சிவகுமாா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன், சைபா் குற்றப்பிரிவு காவல் துறையினா் முன்னிலை வகித்தனா்.
இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தனா்.
Advertisement
Advertisement
தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பண மோசடி, சமூக ஊடகக் கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புதல், நிலம் மற்றும் சொத்துத் தகராறுகள் உள்ளிட்ட பல்வேறு புகாா் மனு அளித்தனா். மொத்தம் 45 புகாா் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 15 மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டது.
இந்த குறைதீா் கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.