முகப்பு
திருப்பூர்

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது

Updated On : 29 ஜூன் 2026, 3:44 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

முத்தூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் முத்தூா் பகுதியில் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, முத்தூா் வரட்டுக்கரை வாய்க்கால் மேடு அருகே மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா் ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலக்குடி தேவா் குடியிருப்பைச் சோ்ந்த பாலமுருகன் (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாலமுருகனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments