அவிநாசியில் பலத்த காற்றுடன் கனமழை: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்
அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.
Advertisement
இதனால், அவிநாசி, தெக்கலூா், புதுப்பாளையம், ராமநாதபுரம், நரியம்பள்ளி, உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
சேதமடைந்த வாழை மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலை, வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.