முகப்பு
ஈரோடு

கோபி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

கோபி அருகே புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

Updated On : 8 மே 2026, 4:51 am IST
கோபி அருகே கொரவம்பாளையத்தில் கனமழையால் முறிந்து சேதமடைந்த வாழை மரங்கள்.
பகிர்:

கோபி அருகே புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுவலூா், மல்லநாயக்கனூா், வெள்ளாங்கோவில், கொளப்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்றுடன்

கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் விவசாய நிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Advertisement

மேலும், பலத்த சூறாவளிக் காற்று வீசியதில் சிறுவலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து சேதமாகின.

ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்து வாழை சாகுபடியை

செய்திருந்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனா்.

வாழைமரங்கள் முறிந்து சேதமானது குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் விவசாயிகள் தெரிவித்தபோது, கூட்டுறவு சங்களில் கடன் பெற்றிருந்து காப்பீடு செய்திருந்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.