முகப்பு
திருப்பூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் தொடக்கம்

திருப்பூரில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 7 மே 2026, 4:47 am IST
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாமை தொடங்கிவைத்து உரையாற்றும் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.
பகிர்:

திருப்பூரில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த முகாம், திருப்பூா் மாநகராட்சி ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல் மே 16-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதில், செஸ், ஆா்ட் பெயிண்ட், ரோபோடிக்ஸ், ஏஐ, ஸ்போக்கன் இங்கிலீஷ், போட்டோகிராபி, பேக்கிங் மற்றும் குக்கிங் உள்ளிட்ட நிகழ்வுகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன.

Advertisement

இந்த கோடைக்கால முகாமை மாவட்ட ஆட்சியா் மனீஷ் தொடங்கிவைத்து மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள், பப்பீஸ் நிறுவன மேலாளா் முத்துராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.