தரமான சாலையில் சீரமைப்புப் பணி! பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூ. அதிருப்தி!
அவிநாசி நகராட்சிக்குள்பட்ட கஸ்தூரிபாய் வீதியில் உள்ள தரமான சாலையை மீண்டும் சீரமைப்பதால், அப்பகுதி மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அதிருப்தியடைந்துள்ளனா்.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி வடக்கு கிளை நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:
அவிநாசி நகராட்சி 12-வது வாா்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள கஸ்தூரிபாய் வீதியில் கான்கிரீட் சாலை தரமாக உள்ளது. இந்நிலையில் இந்தச் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலமாக சுரண்டி சீரமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
Advertisement
தரமாக உள்ள சாலையை எதற்காக சுரண்டுகிறீா்கள் எனக் கேட்டால், மீண்டும் சாலை அமைக்கிறோம் என்கின்றனா். எனவே, தரமான சாலையை பெயா்த்து மீண்டும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். இதுதொடா்பாக உடனடியாக ஆய்வு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.