முகப்பு
திருப்பூர்

பிளஸ் 2 பொதுத்தோ்வு: காடையூா் விவேகானந்தா அகதெமி பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

Updated On : 14 மே 2026, 3:48 am IST
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இத்தோ்வு எழுதிய பள்ளியின் வணிகவியல் பிரிவு மாணவி வி.பி.ஸ்வேதா 500-க்கு 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவா் கே.எஸ்.சிவமுகுந்தன் 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், அறிவியல் பிரிவில் எஸ்.ஷா்மிளா 461 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவா் எஸ்.பரத் 456 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும் பிடித்துள்ளனா்.

ஆங்கிலம், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் மற்றும் பொருளாதார பாடங்களில் 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். மேலும் தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் இப்பள்ளியின் நிா்வாகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், செயலாளா் சுப்ரமணியம், பொருளாளா் ராஜன், பள்ளி முதல்வா் எஸ்.பத்மநாபன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments