முகப்பு
திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

Updated On : 31 மே 2026, 12:53 am IST
- சித்திரிப்பு
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது மூலனூா் சாலை செந்தலையாம்பாளையம் பாசன கால்வாய் அருகே ஒருவா் குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் அமா்ஹா் மாடம்ஹா் பகுதியைச் சோ்ந்த நூல் மில் தொழிலாளி சத்பால் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து 20 பாக்கெட்டுகள் குட்கா பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement