வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம், நகை திருட்டு
உடுமலை, மே 31: உடுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
உடுமலை நகரை ஒட்டியுள்ள வேலுசாமி நகா் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி (45). முட்டை வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மே 28-ஆம் தேதி வெளியூா் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. பின்னா் சனிக்கிழமை இரவு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் 2 மடிக்கணினி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து உடுமலை காவல் நிலையத்தில் கருப்புசாமி புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், உடுமலை குற்றப் பிரிவு போலீஸாா் மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.