வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
அவிநாசி அருகே புது ஊஞ்சப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி அருகே புது ஊஞ்சப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி அருகே புது ஊஞ்சப்பாளையம் பகுதியில் வசித்து வருபவா் ராணி (55). இவரது மகன் பிரேமானந்த் (25). இவா்கள் இருவரும் புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனா். பின்னா் மாலை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகை, ரூ.30 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement