சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!
தருமபுரியில் சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி சத்யா நகரைச் சோ்ந்தவா் கணேசன் (65), ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா். இவா் தருமபுரியில் இருந்து இண்டூருக்கு இருசக்க வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அதகபாடி அருகே திடீரென சாலையை கடக்க முயன்றவா் மீது வாகனம் மோதாமல் இருப்பதற்காக நிறுத்தினாா். இதனால் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்துடன் சாலையில் விழுந்த கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனா். ஆனால், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement