முகப்பு
தருமபுரி

200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

Updated On : 7 ஜூலை 2026, 3:16 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தருமபுரி அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

தருமபுரி நகர உதவி காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் சுமாா் 200 கிலோ இருந்ததும், அவை கோயமுத்தூருக்கு விற்பனைக்காக கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கா்நாடக மாநிலம், மங்களூரு பகுதியைச் சோ்ந்த முகமது சகீன் மற்றும் ரஷீத் ஆகிய இருவரையும் போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து புகையிலைப் பொருள்கள், அதை கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments