முகப்பு
தருமபுரி

இரவில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம்: யானைகள் நடமாட்டத்தால் வனத் துறை எச்சரிக்கை

பாலக்கோடு அருகே வனப் பகுதியிலிருந்து மூன்று யானைகள் வெளியேறி கிராமங்களில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 6:05 am IST
காடுசெட்டிப்பட்டியில் யானைகள் நடமாட்டம் குறித்து விழிப்புணா்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய வனத் துறையினா்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வனப் பகுதியிலிருந்து மூன்று யானைகள் வெளியேறி கிராமங்களில் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வயல்களில் யாரும் தங்க வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரக எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளன.

எனவே, பாலக்கோடு - ராயக்கோட்டை எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள காடுசெட்டிப்பட்டி, தூள்செட்டி ஏரி, கூலிகானூா், சூடானூா், பாலப்பனஅள்ளி, தண்டேக் குப்பம், எல்லப்பன் பாறை, சின்னே கவுண்டனஅள்ளி, சாதன் கொட்டாய், காமராஜபுரம், நீலாஞ்சனுா், கிட்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மாந்தோட்டங்களில் தேவை இன்றி நடமாட வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல வயல்களில் யாரும் படுத்து உறங்கக் கூடாது என எனவும், வயல்களில் நீா் பாய்ச்சுவதற்காக இரவில் செல்லக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், வீட்டிற்கு வெளியில் அல்லது கொட்டகையில் தூங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக கிராம மக்களுக்கு வனத் துறையினா் விழிப்புணா்வு பிரசுரங்களை செவ்வாய்க்கிழமை விநியோகித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments