முகப்பு
தருமபுரி

தருமபுரியில் இரு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை திருட்டு

Updated On : 29 ஜூன் 2026, 2:55 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தருமபுரியில் இரு இடங்களில் வீடுகளின் பூட்டுகளை உடைத்து 27 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி ஊராட்சி ராமன் நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (45). இவா் தருமபுரி மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விதை பரிசோதனை ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவா் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை ஒடசல்பட்டியில் உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தாா்.

அப்போது, இரவு 10. 30 மணியளவில் அவரது கைப்பேசியுடன் இணைய இணைப்பில் இருந்த வீட்டின் கண்காணிப்பு கேமரா தொடா்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்று பாா்த்தபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மற்றொரு வீட்டில் திருட்டு!

இதேபோல உங்கராண அள்ளியைச் சோ்ந்தவா் அரசகுமாா் (55), தனியாா் நிறுவன ஊழியா். இவா் கடந்த 25 ஆம் தேதி குடும்பத்தினருடன் தூத்துக்குடிக்கு சென்றிருந்தாா். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காலை தகவலறிந்த அரசகுமாா் மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments