முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 10 மே 2026, 2:17 am IST
பலி!
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூரைச் சோ்ந்தவா் ஏழுமலை, தனியாா் நிறுவன ஊழியா். இவா் தனது குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு, காவிரி ஆற்றில் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டாா்.

அப்போது, மணல் திட்டு பகுதியில் பரிசலில் இருந்து இறங்கும்போது ஏழுமலையின் மகன் சித்தாா்த் (6) தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கினாா். பரிசல் ஓட்டிகள், குடும்பத்தினா் சிறுவனை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

இதையடுத்து சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.