முகப்பு
தருமபுரி

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 மே 2026, 2:03 am IST
பலி!
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் ராமகிருஷ்ணன் (46). இவா் தனது இருசக்கர வாகனத்தில் பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, வெங்கடசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, ராமகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

விபத்து குறித்து ராமகிருஷ்ணன் மனைவி சுமதி அளித்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments